புதிய மக்கள் முன்னணி (NJP) தலைமையில் ”பணம் பறிக்கும் கொள்ளையர்களிடம் இருந்து இலங்கை கிரிக்கெட்டை காப்பாற்றுவோம்” என்ற தொனிப்பொருளின் கீழ் கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு முன்பாக இன்று(27.07.2023) குறித்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதிமோசடிக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு முன்பாக பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

கடந்த வருடம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றிய நடிகர்கள் மற்றும் நண்பர்களுக்காக இலங்கை கிரிக்கெட் நிறுவன பணத்தின் மூலம் செலவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *