ஈஸ்டர் குண்டுத்தாக்குதலை திசைதிருப்பாதே உண்மையை உலகறியச்செய் எனும் தொனிப்பொருளில் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை பகிரங்கப் படுத்த கோரி போராட்டம் இடம்பெற்றுள்ளது.

அன்மையில் செனல் 4 தொலைக்காட்சியில் மௌலானா என்பவர் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை ( பிள்ளையான்) குற்றஞ்சாட்டி இருந்தார்.

இதனை கண்டிக்கும் முகமாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஆதரவாளர்கள், தொண்டர்கள், உறுப்பினர்கள், நலன் விரும்பிகளால் எதிர்ப்பு ஊர்வலம் இன்றைய தினம  இடம்பெற்றது.

கட்சியின் தலைமையகத்தில் ஆரம்பமான இந்த எதிர்ப்பு நடைப்பயணம்  அரசடி மணிக்கூட்டு கோபுரம் ஊடக திரும்பி காந்தி பூங்காவில் ஊடக சந்திப்போடு நிறைவடைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *