உக்ரைன் தலைநகர் கீவ் மீது நள்ளிரவில் ரஷ்யா டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் காரணமாக வானில் சுமார் 2 மணித்தியாலத்திற்கு புகை மண்டலம் சூழ்ந்ததாக கூறப்படுகிறது.

கீவ் நகரின் மீது சுமார் ஐந்து முறை குண்டுகள் வீசப்பட்டதாக அங்குள்ள செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

குறித்த தாக்குதலால் டார்னிட்ஸ்கி, சோலோமியான்ஸ்கி, போடில் உள்ளிட்ட பகுதிகளின் சில இடங்களில் தீ விபத்து ஏற்பட்டதாக கீவ் நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் கீவ் நகர மேயர் விடாலி கிலிட்ஸ்கோ கூறுகையில், ரஷ்யா நடத்திய டிரோன் தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *