உத்தரகாண்டில் நேற்று இரவு பலத்த கனமழை பெய்தது. இந்த கனமழையால் கேதார்நாத் யாத்திரை பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர்.

அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 16 பேர் காணாமல் போயுள்ளனர். கவுரிகுண்ட் பகுதிக்கு அருகில் பல கடைகள் அடித்து செல்லப்பட்டுள்ளன.

தேசிய பேரிடர் மீட்புப் படையினர் (NDRF) மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் (SDRF) நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பலத்த மழை மற்றும் மலைப்பகுதிகளில் இருந்து ஆங்காங்கே விழும் பாறைகள் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்கு இடையூறாக இருப்பதாக வட்ட அதிகாரி விமல் ராவத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *