கனடா ஆல்பர்ட்டா மாகணத்தின் பிரதான நகரங்களில் ஒன்றான கல்கரியின்  தேசிய மக்கள் சக்தியின்  ஆதரவாளர்கள் நலன்விரும்பிகளின் ஒன்ற கூடல் இன்று இடம்பெற்றது.

கல்கரி கிளன்மோர் பார்க்கில் இன்று நடைப்பெற்ற கூட்டத்திற்கு ரத்னபால தலைமை வகித்தார்.

இந்த  ஒன்று கூடலில் விசேட அம்சமாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான டாக்டார் நாலிந்த ஜெயதிஸ்ஸ  இணையம் ஊடக ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார்.

 

அதில் குறிப்பாக தேசிய மக்கள் சக்தியின் தற்போதைய செயற்பாடுகள் குறித்து விரிவாக விளக்கினார்.

கிராமங்கள் தோறும் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் விளக்கப்படுத்தப்பட்டு வருவதாக சொன்னார்.

மேலும் தமிழ முஸ்லிம் மக்களின் ஆதரவு அவசியம் என்பதை தாங்கள் உணர்ந்திருப்பதாகவும் அதற்கான பணிகள் முன்னெடுக்கப்படுவதாக கூறினார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *