காவிரி விவகாரம் 2024 தேர்தலில் பாதிக்குமா எனக் கேட்கிறார்கள், பாதிக்குமா இல்லை… நான் பாதிக்க வைப்பேன். தேர்தலில் ஒரு இடத்தில்கூட இந்த காங்கிரஸ், பா.ஜ.கவை வெல்ல விடாமல் தடுக்க வேண்டும்” – சீமான்

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் போதிய மழையில்லை, வறட்சியால் அணைகளில் நீர்வரத்து 53% குறைந்துவிட்டது, ஆகவே தமிழ்நாட்டுக்குத் தருவதற்கு, கர்நாடகாவிடம் தண்ணீரே இல்லை” எனப் பழைய புராணத்தை மீண்டும் வாசித்து, காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தின் உத்தரவுகளைக் காலில் போட்டு மிதித்து தமிழ்நாட்டுக்குத் தேவையான உரிய நீரை மீண்டுமொருமுறை தர மறுத்திருக்கிறது கர்நாடகா அரசு.

இவ்வேளையில் `காவிரி நதிநீர் நம் உரிமை” என்ற முழக்கத்தை முன்வைத்து  நாம் தமிழர் கட்சி சார்பில் அக்டோபர் 8-ம் தேதி காலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் திடல் எதிரில் நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதிலிருந்தும் நாம் தமிழர் கட்சியினர் திரண்டு இருந்தனர்.

 

அங்கு பேசிய போதே சீமான் அவர்கள இதனை கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *