வெப்ப அலைகள் காரணமாக தென் கொரியாவில் நடைபெற்று வரும் உலக சாரணர் சந்திப்பில் 600க்கும் மேற்பட்ட சாரணர்கள் உடல்நல குறைவுக்கு உள்ளாகியுள்ளனர்.
அவர்கள் அனைவருக்கும் தேவையான சிகிச்சைகளை வழங்க ஏராளமான மருத்துவ
Dozens of military doctors and nurses were deployed to the camp site of the World Scout Jamboree in Buan, South Korea, as the teenage attendees struggled to cope with the extreme temperatures https://t.co/7RgXkgz0ED pic.twitter.com/GrIIHrr2Rk
— Reuters (@Reuters) August 3, 2023
இவ்வாறான வெப்பத்தை மேற்கிந்திய மாணவர்கள் ஒரு போதும் உணராதனால் அவர்கள் குளிர் நீரை கேட்டு அருந்துவதுடன் ஈரத்துணியை தலையில் வைத்திருப்பதாக அங்கிருக்கும் கனேடிய மாணவரொருவர் அண்ணாச்சிநியூஸிற்கு கூறினார்.
மேலும் வெப்பம் காரணமாக நுளம்பின் தொல்லை அதிகரித்து இருப்பயாகவும் தங்களது பிள்ளைகள் கஷ்டப்படுவதாக பிரித்தானிய பெற்றோர் கவலைப்பட்டுள்ளனர்
பெருந்தொற்றுக்கு பிறகு முதல் முறையாக மிகவும் பிரம்மாண்டமாக தென் கொரியாவில் உலக சாரணர் சந்திப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. 14 வயது முதல் 18 வயதுடைய சுமார் 43,000 சாரணர்கள் இந்த சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
தென் கொரிய அரசாங்கம் தன்னுடைய எல்லா வளங்களை உபயோகித்து கடுமையான வெப்ப அலை எச்சரிக்கைக்கு மத்தியில் உலக சாரணர் சந்திப்பு கூட்டம் பாதுகாப்பாக முடிவடைவதை உறுதிப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.