நிலவும் சீரற்ற வானிலையால், டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய  டெங்கு ஒழிப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

நாடளாவிய ரீதியில் 412 டெங்கு நோயாளர்கள் நேற்று (15) பதிவானதாக தேசிய  டெங்கு ஒழிப்பு பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், டெங்கு காய்ச்சலினால் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

2022 ஆம் ஆண்டு 19 ஆவது வார நிறைவில், 1294 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்ததாக தேசிய  டெங்கு ஒழிப்பு பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும், இந்த வருடத்தின் 19ஆவது வார நிறைவில் 2029  டெங்கு ​நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

நேற்று பதிவான 412 டெங்கு நோயாளர்களில் 261 பேர் மேல் மாகாணத்தை சேர்ந்தவர்களாவர். இவர்களில் 132 பேர் கொழும்பை சேர்ந்தவர்கள். கம்பஹா மாவட்டத்தில் 98 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *