தமிழ் முற்போக்கு கூட்டணியால் எதிர்வரும் 12 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடை பயணிக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவு வழங்கினால் அதனை வரவேற்போம் – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
சூரியன் வானொலியின் விழுதுகள் நிகழ்ச்சியில் இந்த கருத்தை அவர் கூறி இருந்தார்.
எவ்வாறாயினும் இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் இதுவரை எந்த பதிலையும அளிக்கவில்லை. இதனால் நடைப்பயணத்திற்கு ஆதரவு வழங்குமா இல்லையா என்பது இதுவரை தெரியவில்லை
இதேவேளை “மலையகம் 200′ மாற்றத்தை நோக்கிய நடை பயணம் தொடர்பில் அட்டன்,டிக்கோயா,வட்டவளை பிரதேச தொழிலாளர் தேசிய சங்கத்தின் செயற்பாட்டாளர்களுக்கான முக்கிய கூட்டம் இன்று அட்டன் தலைமை பணி மனையில் இடம் பெற்றது.
முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரான சோம ஸ்ரீதரன் தலைமையில் இந்த கூட்டம் இடம்பெற்றது.