நாட்டை, உலகை திரும்பி பார்க்க வைக்கும் மலையக தமிழன் என்று சொல்லுங்கள்.
தடை செய்யப்பட்ட வார்த்தை பிரயோகம் வேண்டாம் என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
முத்தையா முரளிதரனின் வாழ்க்கை சரிதம் என்ற அடிப்படையில் வெளிவரவுள்ள 800 திரைப்படத்தின் டிரைலரில் “தோட்டக்காட்டான்” என்ற சர்ச்சைக்குரிய சொற்பிரயோகம் இடம்பெற்றிருந்தது.
அதை விடுத்து, தான் பிறந்த தேசிய இன சமூகத்தை தானே இழிவு படுத்தும் வார்த்தை பிரயோகம் வேண்டாம்.
இந்நாட்டு இந்திய #வம்சாவளி #மலையக தமிழர் மத்தியில், தடை செய்யப்பட்ட இழிவு வார்த்தையை உங்கள் பட முன்னோட்ட காணொளி “ட்ரேலரில்” பயன்படுத்த வேண்டாம்.
அந்த வார்த்தையை நானே நேரடியாக தடை செய்து பகிரங்கமாக காட்டியுள்ளேன்.
கதையம்சத்துக்கு தேவை என என்னிடம் கதைவிட வேண்டாம்.
நானே ஒரு கதாசிரியர். எனக்கு இதுபற்றி தெரியும்.
அந்த இடத்தில் “நாட்டை திரும்பி பார்க்க வைத்த மலையக தமிழன்” என்று மாற்றி போடுங்கள். எல்லாம் சரியாக வரும். என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறுகிறார்.