தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு காணி அளவீடு செய்து கையகப்படுத்துகின்ற நோக்கத்தோடு மேற்கொள்ளப்பட்ட அளவீட்டு நடவடிக்கைக்கு எதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் இன்று போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தின் காரணமாக அளவீட்டு நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருக்கின்றது என பாராளுமன்ற உறுப்பினரான செல்வராசா கஜேந்திரன் கூறினார்.

காணி உரிமையாளர்கள் கட்சியின் செயற்பாட்டாளர்கள் பாராளுமன்ற உறுப்பினரான எஸ் ஸ்ரீதரன்  என ஏராளமானோர் தங்களது  எதிர்ப்பை வெளியிட்டு இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *