அஸ்ரப் அலீ

போலந்து நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைய முற்பட்ட இலங்கையர்கள் உள்ளிட்ட ஒரு குழுவினர் நேற்று அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்

சுமார் 160 பேர் கொண்ட குழுவொன்றே இவ்வாறு போலந்து நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைய முற்பட்டுள்ளனர்

பெலாரஸ் எல்லை வழியாகவே இவர்கள் போலந்துக்குள் சட்டவிரோதமாக நுழைய முற்பட்டதாக போலந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இலங்கையர்கள் மாத்திரமன்றி எகிப்து, சோமாலியா, எத்தியோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் உள்ளடங்கி இருப்பதாக தெரிய வந்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *