அஸ்ரப் அலீ

மட்டக்களப்பு மாவட்டத்தில் பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் ஆராய்வதற்கு வருகைதந்த பல்சமய தலைவர்கள், பண்ணையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் சிலரினால் இடையூறு செய்யபட்டுள்ளனர்

பண்ணையாளர்கள் தங்களது கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரை தொடர்பாக எதிர்நோக்கும் பிரச்சனைகளை பார்வையிட்டு அவற்றை கேட்டறிவதற்காக களவிஜயம் மேற்கொண்டு பண்ணையாளர்களுடன் கலந்துரையாடலினை முன்னெடுத்தனர்.

இதன் பிற்பாடு பிரச்சனைகள் தொடர்பாக ஆராய்ந்து மீண்டும் திரும்பி செல்லும்போது அப்பகுதியில் சட்டவிரோதமாக காணிகளை பிடிப்பவர்கள் மற்றும் பௌத்த மதகுரு ஒருவரும் இனைந்து அனைவரையும் வரும் வழியில் மறித்து சிறைபிடித்துள்ளனர்.

வாகனங்களின் சாவிகளும் குண்டர்களினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிறைப்பிடிக்கப்பட்டவர்கள் மூன்று மணிநேரமாக அவ்விடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், பொலிசார் மற்றும் ஆளுனருக்கு அறிவித்தும் இதுவரை எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று தெரிய வந்துள்ளது

இவர்களை மீட்பதற்கு வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தலைமையிலான பொலிசார் அந்த பகுதிக்கு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் சற்று முன்னர் பாராளுமன்றத்தில் தெரிவித்தோடு இந்த சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *