பூண்டுலோயா பாலுவத்தை பகுதியில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் 17 வயது இளம் பெண் மரணமாகியுள்ளார்.
பூண்டுலோயாவில் இருந்து அக்கரப்பத்தனை பிரதேசத்திற்கு மோட்டார் சைக்கிளில் செல்லும் போதே மரக்கிளை முறிந்து விழுந்துள்ளது.
இச்சம்பவம நேற்று மாலை 6.30 மணியளவில் பூண்டுலோயா நியாகந்தை பாலுவத்த பகுதியில் நிகழ்ந்துள்ளது
இவ்வாறு இறந்தவர் அக்கரப்பத்தனை உருவள்ளி பகுதியை சேர்ந்த 17 வயதான விஜயராஜ் திவியராணி என அடையாளம் காணப்பட்டுள்ளது.¶
சடலம் கொத்மலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.
செய்தி -கௌசல்யா, பாலேந்திரன்