மாலத்தீவு நாட்டில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறி ஏற்பட்டுள்ளது. இதனால் 2-வது சுற்று தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தெற்கு ஆசிய நாடான மாலத்தீவில் நேற்று முன்தினம் அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஆளும் மாலத்தீவு ஜனநாயகக் கட்சியின் சார்பில் தற்போதைய அதிபர் இப்ராகிம் முகமது சோலிக் மீண்டும் போட்டியிடுகிறார்.

அவரை எதிர்த்து, பிரதான எதிர்க்கட்சியான மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சியில் சார்பில் முகமது முயிஸ் போட்டியிடுகிறார். இவர்கள் தவிர மேலும் 6 பேர் அதிபர் பதவிக்கான போட்டியில் களத்தில் உள்ளனர்.

நேற்று முன்தினம் நடந்த தேர்தலில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். இதனால் வாக்குப்பதிவு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து தேர்தலில் பதிவான வாக்குகள் உடனடியாக எண்ணப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *