ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதியில் பஸ் ஆற்றில் கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

ராஞ்சியில் இருந்து கிரிதி நோக்கி பஸ் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பராக்கர் ஆற்றின் பாலத்தில் செல்லும்போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் ஆற்றில் கவிழ்ந்ததால் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி பயணிகள் உயிருக்கு போராடினர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் மீட்பு படையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக வெவ்வெறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *