ஸ்பெயினில் உள்ள முர்சியாவில் நகரில் உள்ள இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அட்டலயாஸ் பகுதியில் உள்ள பிரபலமான டீட்டர் இரவு விடுதியில் சுமார் 06:00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் சமூக ஊடகங்கள் பகிரப்பட்ட காணொளியில், கட்டிடத்தின் மேலே தீப்பிழம்புகள் எரிவதையும், அதன் பெரிய ஜன்னல்களில் இருந்து அடர்ந்த, இருண்ட புகை வெளியேறுவதையும் காட்டுகிறது.

காணாமல்போன மற்றும் அந்தவேளை வளாகத்தில் இருந்தவர்களை அவசர சேவைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், முர்சியாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்க மேயர் அழைப்பு விடுத்துள்ளார்.

இத் தீ விபத்துக்கான காரணம் சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *