ராமு தனராஜா
ஹப்புத்தளை பண்டாரவளை வீதியில் பார ஊர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்
கொழும்பில் இருந்து பண்டாரவளை பகுதிக்கு பொருட்கள் ஏற்றி வந்த பார ஊர்தி ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்து பண்டாரவளை ஹப்புத்தளை வீதியில் ஓத்தகடை புகையிரதக்கடவைக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
பார ஊர்தியில் பிரேக் இல்லாமல் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது
பார ஊர்தியின் சாரதியான 44 வயதுடைய நபர் பலத்த காயமடைந்த நிலையில் தியதலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்
பாரவூர்தியின் நடத்துனர் தியத்தலாவ வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்
மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்விபத்து இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
ராமு தனராஜா