பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த புகையிரதம் ஒன்று நண்பகல் 12 .15 மணியளவில் ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவ புகையிரத நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று 10.15 மணியளவில் பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த அதிவேக புகையிரதமே தடம் புரண்டதாக புகையிரத நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

புகையிரதம் தடம்புரண்டதன் காரணமாக பதுளையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த புகையிரதம் பண்டாரவளை புகையிரத நிலையத்திலும், கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த சரக்கு புகையிரதம் ஹப்புத்தளை புகையிரத நிலையத்திலும் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

மலையகத்துக்கான புகையிரத போக்குவரத்தில் தாமதம் ஏற்படக்கூடும் எனவும் புகையிரத கட்டுப்பாட்டு அறை மேலும் தெரிவித்துள்ளது.

ராமு தனராஜா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *