இந்த நாட்டில் உள்ள மக்கள் அனைவரையும் ஒன்றாக பார்ப்பதாக கூறும் ஜனாதிபதி தமது பிரச்சினைக்கு உடனடி தீர்வினைப்பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட கால்நடை பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொட்டும் மழையிலும் நேற்றையதினம் (04.10.2023) கால்நடை பண்ணையாளர்கள் கைகளில் தீப்பந்தங்களை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மட்டக்களப்பு சித்தாண்டி பாடசாலைக்கு முன்பாக கடந்த (15.09.2023)ஆம் திகதி முதல் பெரியமாதவணை, மயிலத்தமடு கால்நடை பண்ணையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

20 தினங்களாக தமது கால்நடைகளையும் குடும்பங்களையும் கவனியாது வீதிகளில் போராடிவருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதுமட்டுமன்றி தமது பிரச்சினைகள் குறித்து அதிகாரிகளும் சில அரசியல்வாதிகளும் அக்கரையற்ற நிலையில் உள்ளதாகவும் பண்ணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *