“ஐ”க்குள் “கை” வைத்த லைக்கா! 2 வருடங்களுக்கு ஒளிப்பரப்பு நேர குத்தகை – பந்துல்ல நம்பிக்கை!!

இலங்கையின் தேசிய தொலைக்காட்சியான ரூபவாஹினி கூட்டுதாபனத்தின் கீழ் இயங்கும் செனல் “eye”  நிறுவனத்தை லைக்கா நிறுவனத்திற்கு குத்தகை   கொடுக்க போகும் அமைச்சரவை பத்திரம் அமைச்சரவையில் நிராகரிக்கப்பட்டதாக வெளிவந்த செய்திகளில் உண்மையில்லை என  ஊடகத்துறை மற்றும் போக்குவரத்து , பெருந்தெருக்கல் அமைச்சர்  பந்துல்ல குணவர்தன கூறுகிறார். கொழும்பில்த நடைப்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதன கூறினார். மேலும் நட்டத்துடன் இயங்கும்  குறிப்பாக மின்சார கட்டணம் கூட செலுத்த முடியாத  செனல் eye நிறுவனத்தை விற்கவோ குத்தைக்கு கொடுக்கவோ நான் முயற்சிக்கவில்லை. […]

உழைக்கும் மக்களின் உரிமைகளை அழிக்கும் அரசாங்கத்துடன் சம்பந்தம் செய்பவன் நான் இல்லை!! சஜித்

நலீர் அகமட் உழைக்கும் மக்களின் உரிமைகளை அழிக்கும் அரசாங்கத்துடன் எங்களுக்கு எந்த வித சம்பந்தமும் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறுகிறார். மக்களைக் கொல்லும்,மக்களை ஒடுக்கும் அரச பயங்கரவாதத்தை முன்னெடுத்து வரும் தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்துடன் எந்தவித உடன்பாடோ அல்லது இணக்கப்பாடோ இல்லை என்றும்,தீவிர இடதுசாரி அல்லது தீவிர முதலாளித்துவ கொள்கையை விடுத்து மூன்றாவது வழியை பின்பற்றும் கட்சியாக இந்நாட்டு மக்களின் மனித உரிமைகள் மட்டுமன்றி பொருளாதார,சமூக மற்றும் அரசியல் உரிமைகளையும் பாதுகாத்துக் […]

கொழும்பில் சிறப்பாக நடந்த “ஹிஜ்ரத்” கவி அரங்கு

எம நாசர் . தாருல் ஈமான் இலக்கிய வட்டம் மற்றும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி – கொழும்பு பிராந்தியம். ஆகிய அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த  “ஹிஜ்ரத்” கவியரங்கம்  நேற்றைய (15-08-2023,) தினம் இடம்பெற்றது   கொழும்பு, தெமட்டகொட வீதியிலுள்ள தாருல் ஈமான் (இஸ்லாமிக் புக் ஹவுஸ்) கேட்போர்கூடத்தில் நடைப்பெற்ற கவியரங்கிற்கு சிரேஷ்ட சட்டத்தரணியும் இலக்கியவாதியுமான கலாபூஷணம். ரஷீத் எம் இம்தியாஸ் தலைமை தாங்கினார். கவியரங்கில் கவிஞர் ரவூப் ஹஸீர் (கொழும்பு) கவிஞர் கஸ்ஸாலி அஷ் ஷம்ஸ் […]

கனடாவில் கலக்கிய தமிழக காவலர்கள்! உதயநிதி நேரில் வாழ்த்து!!!

கனடா நாட்டின் வின்னிபெக் மாகணத்தில் அண்மையில் நடைபெற்ற #WorldPoliceFireGames போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த 15 காவலர்களும், தீயணைப்புத்துறையைச் சேர்ந்த 4 காவலர்களும் கலந்துகொண்டு பல்வேறு பிரிவுகளில் 21 தங்கம் – 18 வெள்ளி – 15 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளனர். இவர்களை தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரடியாக வாழ்த்து தெரிவித்துள்ளார். மொத்தம் 54 பதக்கங்களை குவித்து தமிழ்நாட்டுக்கு பெருமைத் தேடித்தந்த நம் காவல்துறை – தீயணைப்புத்துறை வீரர் – வீராங்கனையரை  அவர் இன்று  வாழ்த்தியுள்ளார்

சம்பந்தனும் ஹக்கிமூம் மனோவுமே மாகண சபை தேர்தல் பிற்போட காரணம்! காங்கிரஸ் தலைவர் மஜித் !

13ஐ முழுமையாக‌ அமுல்ப‌டுத்தி மாகாண‌ ச‌பை தேர்த‌லை ந‌ட‌த்தும் ப‌டி த‌மிழ் தேசிய‌ கூட்ட‌மைப்பின் த‌லைவ‌ர் சம்ப‌ந்த‌ன் ஜ‌னாதிப‌திக்கு க‌டித‌ம் எழுதியிருப்ப‌த‌ன் மூல‌ம் மாகாண‌ ச‌பை தேர்த‌ல் ந‌ட‌க்காமைக்கான‌ கார‌ண‌ம் த‌மிழ் கூட்ட‌மைப்பும் ஹ‌க்கீமும், ம‌னோ க‌ணேச‌ன் போன்றோரும்தான் என்ற‌ உண்மையை ம‌றைத்து நாட்டு ம‌க்க‌ளை ஏமாற்ற‌ முய‌ற்சி செய்கிறார் என‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்துள்ளார். அவ‌ர் தெரிவித்த‌தாவ‌து, 13ஐ முழுமையாக‌ அமுல்ப‌டுத்தாத‌ நிலையில்தான் 88ம் ஆண்டு முத‌ல் மாகாண‌ ச‌பைத்தேர்த‌ல் […]

வெடிபொருட்களை மீட்கும்வரை மணிப்பூரில் அமைதி திரும்பாது

மணிப்பூரில் கடந்த மே 3ம் தேதி முதல் வன்முறை அரங்கேறி வருகிறது. இந்த வன்முறையில் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். குகி மற்றும் மெய்தி இனக்குழுக்களுக்கு இடையே நடைபெற்று வரும் இந்த வன்முறையை தடுக்க பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இரு குழுக்களுக்கு இடையே தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த சூழ்நிலையில் பாதுகாப்புப்படையினரிடமிருந்து திருடப்பட்ட ஆயுதங்கள், வெடிபொருட்களை மீட்கும்வரை மணிப்பூரில் அமைதி திரும்பாது என மக்களவைக்கான காங்கிரஸ் துணை தலைவர் கவுரவ் கோகாய் தெரிவித்துள்ளார். இரு தரப்புக்கும் […]

நாடு முழுவதும் 10 ஆயிரம் புதிய மின்சார பஸ்கள்

பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு முடிவுகள், முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மந்திரிசபை கூட்டத்திற்கு பின் மத்திய மந்திரிகள் அனுராக் தாகூர் மற்றும் அஸ்வின் வைஷ்ணவ் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, மத்திய மந்திரி அனுராக் தாகூர் கூறுகையில், ‘பிரதம மந்திரியின் மின்சார பஸ் சேவை திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு 57 ஆயிரத்து 613 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது. இந்த திட்டத்தின் […]

இங்கிலாந்தில் புகைப்பழக்கத்தை ஒழிக்க அரசாங்கம் உறுதி

இங்கிலாந்தில் புகைப்பிடித்தல் பழக்கத்தால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு இங்கிலாந்து நாட்டில் புகைப்பிடித்தல் பழக்கத்தால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஆண்டுக்கு சுமார் 5 லட்சம் பேர் புற்றுநோய், மாரடைப்பு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் தனிநபருக்கு மட்டுமின்றி அரசாங்கத்துக்கும் சுகாதார செலவுகள் அதிகரித்து வருகின்றன. எனவே இதனை குறைக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் ஒருபகுதியாக சிகரெட் பாக்கெட்டுகளில் அதனால் ஏற்படும் பாதிப்புகளையும், புகைப்பழக்கத்தை கைவிடும்போது ஏற்படும் நன்மைகளையும் குறிப்பிட்டு […]

கொரியாவுக்கு தப்பியோடிய அமெரிக்க இராணுவ சிப்பாய்

அமெரிக்க இராணுவ சிப்பாய் ஒருவர் கடந்த மாதம், எல்லை கடந்து வட கொரியாவுக்கு தப்பியோடிமைக்கு அமெரிக்க இராணுவத்திலுள்ள இனவாதமே காரணம் வட கொரியா தெரிவித்துள்ளது. ட்ரேவிஸ் கிங் எனும் 23 வயதான அமெரிக்க சிப்பாய், கடந்த மாதம் தென் கொரியாவிலிருந்து வட கொரியாவுக்குள் நுழைந்தார். அவர் புகலிடம் கோருவதற்கான விருப்பத்தை தெரிவித்துள்ளார் எனவும் வட கொரிய அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. எனினும் இவ்விடயத்தை தான் உறுதிப்படுத்த முடியாதுள்ளதாக அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் மேற்படி சிப்பாயை பாதுகாப்பாக […]

அமெரிக்க நீதிபதி ஒருவரின் வீட்டில் 47 துப்பாக்கிகள்

மனைவியை சுட்டுக் கொன்ற அமெரிக்க நீதிபதி ஒருவரின் வீட்டில் 47 துப்பாக்கிகளும் 26,000 தோட்டாக்களும் காணப்பட்டதாக நீதிமன்றத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியா மாநிலத்தில் நீதிபதிகளில் ஒருவரான ஜெப்ரி பேர்குசன் (70), கடந்த வருடம் மதுபோதையில் தனது மனைவியை சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணை நேற்று செவ்வாய்க்கிழமை (15) நடைபெற்ற போதே மேற்படி விடயம் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது. வீட்டுக்கு அருகிலுள்ள உணவு விடுதியொன்றில் பேர்குசனுக்கும் 65 வயதான […]