IMF ஆதரவின்றி நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை வழங்குவதாக யாராவது கூறினால் அவர்களிடம் தீர்வு இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

பொருளாதார வளர்ச்சி விகிதம் இந்த ஆண்டின் இறுதியில் எதிர்மறை 3 ஆக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர்  நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆனால், அரசாங்கம் முன்னெடுத்து வரும் இந்த வேலைத்திட்டத்தின் மூலம் அதனை விடவும் சிறப்பான முன்னேற்றத்தை அடைய முடியும் என்ற பெரும் நம்பிக்கை உள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர்  தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டில் ஒரு நல்ல, சாதகமான ஆண்டை நோக்கி நகர்வதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம் என நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையம் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவுக்கும் போதே ஷெஹான் சேமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மீண்டும் இது போன்ற நெருக்கடிகள் ஏற்படாத வகையில் தெளிவான எதிர்காலத்தை உருவாக்க அனைவரின் ஆதரவும் அவசியம் என நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *