2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 5 இஸ்லாமிய அமைப்புகளுக்கு விதிக்கப்பட்ட தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஐக்கிய தௌஹீத் ஜமாஅத், சிலோன் தௌஹீத் ஜமாத், ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத், ஐக்கிய இலங்கை தௌஹீத் ஜமாத் மற்றும் ஜம்மியதுல் அன்ஸாரி சுன்னதுல் மொஹமதியா ஆகிய 5 அமைப்புகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு, பொது ஒழுங்கு மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டும் நோக்கில் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இந்த அமைப்புக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *