தம்புத்தேகம – ஹிரியகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று அதிகாலை நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

லொறியொன்றும், வேன் ஒன்றும் மோதுண்டே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் மேலும் நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

விபத்தில் கஹடகஸ்திகிலிய
SAM கொமினிகேசன் உரிமையாளர் அப்துல் ஹக் மெளலானா ,
(கஹடகஸ்திகிலிய தேசிய பாடசாலை அதிபர் ஸஹாப்தீன் ஆசிரியரின் சகோதரர் ) மற்றும் அவரது மனைவி, தங்கை மற்றும் வேன் ட்ரைவர் உட்பட நான்கு பேர் மரணமடைந்துள்ளனர்.

 

உம்றா செல்வதற்காக பாஸ்போட் எடுப்பதற்காக கொழும்புக்குச் சென்று திரும்பி வரும் வழியில் இரவு 11:30 மணியளவில் இவ் விபத்து இடம் பெற்றுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *