உலகம் முழுவது நேற்று ஆகஸ்ட் 10 லெளியான  சூப்பர ஸ்டார் ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான “ஜெயிலர்” திரைப்படம் வசூல் சாதனை படைத்திருக்கிறது.

இதுவரை உலகம் முழுவதும் ஒரு நாளில் ( வியாழக்கிழமை) 98.7. கோடி இந்திய ரூபாய்களை வசூலித்திருக்கிறது.

தமிழ் நாட்டில் வழமையாக மன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு சிறப்பு காட்சிகள் வழங்கப்படுவது வழமை.

ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக அரசு சிறப்பு காட்சி முறையை ரத்து செய்தது.

சிறப்பு காட்சி இருந்திருந்தால் 100 கோடி ரூபாயை  படம் வசூலித்திருக்கும் என சினிமா  விமர்சகர்கள் கூறுகின்றனர்.

நேற்றைய வசூல் விபரம்

தமிழ் நாடு – ₹ 26  கோடி

கேரளா.      – ₹ 5.85  கோடி

கர்னாடக  – ₹ 11.85 கோடி

ஆந்திரா.   – ₹ 12 கோடி

ஏனைய மாநிலங்கள் – ₹ 3 கோடி

வெளிநாடுகள் – ₹ 40 கோடி

மொத்தமாக  – ₹ 98.70 கோடி

இந்த தரவுகள் அனைத்தும பாக்ஸ் ஆபிஸ் விமர்சகர் ரமேஷ் பாலாவின் டூவிட்டரில் இருந்து பெறப்பட்டது.

இன்று வெள்ளிக்கிழமை இந்த வசூல் மேலும் அதிகரிக்கலாம்  என கூறப்படுகிறது.

நாளை  முதல் குடும்பங்களின் கொண்டாட்டமாக ஜெயிலர் இருக்கும் என்பதே உண்மை

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *