டி.சந்ரு செ.திவாகரன்

 

நுவரெலியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசங்களில் வாழும் பொது மக்களின் நலன் கருதி சுத்தமான குடிநீர் வழங்கல் செயற்பாடுகளை விரிவுபடுத்துவதற்காக ஒரு கோடி 35 இலட்சம் ரூபா பெறுமதியான தண்ணீர் பவுசர் ஒன்றினை கோயிகா (KOICA) மற்றும் யூ , என் ஹெபிடாட் (UN – HABITAT ) நிறுவனங்கள் ஒன்றினைந்து உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வு நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட தலைமையில் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இன்று புதன்கிழமை (16) நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் நுவரெலியா மாவட்ட செயலாளர் கோயிகா நிறுவனத்தின் பணிப்பாளர் கிம் , யூ.என் ஹெபிடாட் நிறுவனத்தின் முகாமையாளர் சலிம் கறீம் சாடா மற்றும் இரு நிறுவனத்தின் ஏனைய உத்தியோகத்தர் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *