ராமு தனராஜ்
டெமேரியா A. தோட்ட தொழிலாளர்கள் தோட்ட காரியாலயத்தை டெமேரியா B தோட்த்துக்கு மற்றுவதற்குதுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று நேற்று முன் தினமும் முன்னெடுக்கப்பட்ட வேலை நிறுத்த போராட்டம் இன்றைய தினம் கைவிடப்பட்டது
 இலங்கை தேசிய தோட்ட தொழிலார் சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கம்  ஆகிய இரண்டு தொழில் சங்க பிரதிநிதிகள் இணைந்து தோட்ட நிர்வாகத்துடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் போது தோட்ட நிர்வாகம் தோட்ட தொழிலாளர்களின் வேண்டுகோளை ஏற்று கொண்டதன் பின்னர் வேலை நிறுத்த போராட்டம். தோட்ட தொழிலாளர்களினாள் கைவிடப்பட்டது.
டெமேரியா A தோட்ட காரியாலயதை இடமாற்றம் செய்ய போவது இல்லை எனவும் கணக்காளர் பிரிவு மாத்திரம் கணக்காளர் இன்மையால் டெமேரியா Bதோட்டத்துக்கு  மாற்றுவதாகவும் தோட்ட நிர்வாகம் கூறியுள்ளது அதற்க்கு இணக்கம் தெரிவித்த தோட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் போராட்டத்தை கைவிட்டதாக தொழில் சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *