( வாஸ் கூஞ்ஞ) 17.08.2023மன்னார் நானாடடன் பிரதேசத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நானாட்டான் ஸ்ரீ செல்வமுத்துமாரியம்மன் ஆலயத்தில் வருவடாந்த மஹோட்சவத் திருவிழாவுக்கான கொடியேற்ற நிகழ்வும் அமைக்கப்பட்ட அலங்கார வளைவு திறப்பு விழாவும் புதன்கிழமை (16) காலை 10 மணியளவில்  ஆலயத்தின் திருவிழா பிரதம குரு சி.ஸ்ரீ சண்முகநாதக் குருக்கள் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது

இந்த நிகழ்வில் ஏராளமான அம்பிகையின் பக்தர்கள் கலநது கொண்டார்கள்

வழமையாக 10 நாட்கள்  கொண்ட மஹோட்சவத் திருவிழாவானது  இம்முறை 15 நாள் திருவிழாவாக  ஏற்பாடு செய்யப்பட்டு எதிர்வரும் 31ம் திகதி  நிறைவுபெறவுள்ளது

மேலும் புஸ்பாஞ்சலிஇ அன்ன பூரணஇ திருவிழாஇ கற்பூரத் திருவிழாஇ வசந்த உற்சவம்இ சங்காபிஷேகம்இ வேட்டைத் திருவிழாஇ சப்பறத் திருவிழாஇ தேர்த் திருவிழாஇ தீர்த்தம்இ வைரவர் சாந்திஇ என்று 15 நாள் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

(வாஸ் கூஞ்ஞ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *