நாகை மாவட்டம் வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியதால் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் போராட்டம் செய்து வருவதாக தமிழக செய்திகள் கூறுகின்றன.

கோடியக்கரைக்கு தென்கிழக்கு கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 3 மீனவர்களை தாக்கி, படகில் வைத்திருந்த ஜிபிஎஸ் கருவி, வாக்கிடாக்கி, பேட்டரி, செல்ஃபோன், 20 லிட்டர் டீசலை கொள்ளையடித்துச் சென்றனர்

வேதாரண்யம் மீனவர்கள் ஏற்கனவே நேற்று மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியிருந்தனர்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை

தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினராலும், இலங்கை கடற்கொள்ளையராலும் தாக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது;

கடற்கொள்ளையர்களால் நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து நாகை மீனவர்கள் இன்று வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்;

தமிழக முதலமைச்சர் மீனவர்களை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், எப்போதும் போல மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதி முடித்திருக்கிறார்;  என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *