அஸ்ரப் அலீ

ரஷ்யாவில் இன்று மாலை இடம்பெற்ற விமான விபத்தில் வாக்னர் கூலிப்படைத் தலைவர் யெவ்ஜினி பிரிகோசின் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது

ரஷ்யாவின் மொஸ்கோவில் இருந்து செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நோக்கிப் பறந்து கொண்டிருந்த சிறிய ரக தனியார் விமானம் ஒன்றே டீவர் பிராந்தியத்தின் (Tver Region) குசென்கினோ கிராமம் ( Kuzhenkino) அருகே வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது

விமானத்தில் ஏழுபேர் பயணித்துள்ளனர். பயணிகள் பெயர்ப்பட்டியலில் வாக்னர் கூலிப்படையின் தலைவர் ப்ரிகோசின் பெயரும் உள்ளடக்கப்பட்டிருந்தது.

 

எனினும் அவர் விமானத்தில் பயணித்தாரா இல்லையா என்பதை இதுவரை உறுதிப்படுத்திக் கொள்ள முடியாதிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *