( வாஸ் கூஞ்ஞ)
பேசாலைப் பகுதியினில் தனது திருப்பொற்பாதங்களை பதித்து அருளாட்சி செய்யும் வள்ளி தெய்வானை சமேத சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தை பேசாலை இந்து மக்கள் கொண்டாடுகின்றார்கள்.
வெள்ளிக்கிழமை (01) விநாயகர வழிபாடு சாந்தியுடன் ஆரம்பமாகியுள்ள இவ்வருடாந்த விழா சனிக்கிழமை (02) முதல் ஆரம்பமாகி 11.09.2023 வுடன் நிறைவு பெறுகின்றது.
இவ்விழாவுக்கு உற்சவ பிரதம குருவாக தேசகீர்த்தி செந்தமிழருவி கலாநிதி சிவஸ்ரீ மஹா தர்மகுமார குருக்கள் மற்றும் உதவிக் குருமார்களாக பிரம்மஸ்ரீ பிரசாந் சர்மா , பிரம்மஸ்ரீ ஆகாஷ் சர்மா மற்றும் பிரம்மஸ்ரீ ரதன் சர்மா ஆகியோர் செயல்படுகின்றனர்.
(வாஸ் கூஞ்ஞ)