வெலிகம சுமங்கலா மகளிர் தேசிய பாடசாலையில் கற்றுக்கும் மாணவர்களுக்கு தமிழ் மொழி படத்தை தெரிவு செய்ய வேண்டாம் என பாடசாலை நிர்வாகம அறிவுறுத்தியுள்ளது.

பாடசாலையில் தமிழ் மொழி கற்பிக்கும் ஆசிரியர்ஙள் இன்மையே இதற்கு காரணமான சொல்லப்படுகிறது.

ஆயினும் தமிழர்கள்  முஸ்லிம் மக்கள் வாழும் மாத்தறை மாவட்டத்தில் இந்த நிலைமை ஏற்பட்டு இருப்பதை வெலிகம முன்னாள் நகர பிதா ரெஹான் ஜயவிக்ரம வன்மையாக தமது “x” ( டூவிட்டர்) ல் கண்டித்துள்ளார்

அதில் வெலிகம சுமங்கல மகளிர் தேசிய பாடசாலை மாணவர்களுக்கு தமிழா மொழியை பாடமாக தெரிவு செய்ய கூடாது, ஆசிரியர் இன்மையே அதற்கு காரணம்.

இதனை ஏற்று கொள்ள முடியாது கல்வி அமைச்சு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் நகரபிதா கூறி இருக்கிறார்.

கல்வி அமைச்சர் அல்லது இராஜாங்க அமைச்சர் இதனை கருத்தில் கொள்வார்களா? இனங்களுகிடையே ஐக்கியம் ஏற்பட மொழி அறிவு அவசியம் என்பதை உரியவர்கள் உணரட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *