கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டு நபர்கள் உயிரிழந்தனர்.

அவர்களுக்கு நிபா வைரஸ் பாதிப்பு தொடர்பான அறிகுறிகள் இருந்ததால், இயற்கைக்கு மாறான மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் நிபா வைரசால் இறந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இறந்தவர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட ரத்தம் உள்ளிட்ட மாதிரிகள் ஆய்வுக்காக புனேயில் உள்ள தேசிய வைராலஜி ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இன்று மாலையில் அதன் முடிவுகள் வெளியாகும். அதன்பிறகே, அவர்களின் மரணத்திற்கு காரணம் என்ன? என்பது உறுதி செய்யப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *