மன்னர் ஸல்மான் பின் அப்துல் அஸீஸ் நிவாரண, மனிதநேய உதவிகளுக்கான மையத்தின் ஏற்பாட்டில் ஸவுதி தமாம் சர்வதேச கண் பார்வை அமைப்பின் உதவியுடன் இலங்கையில் கண் பார்வைக்குறைபாட்டு நோயினைக் குறைப்பதற்கான ஸவுதியின் ‘அந்நூர்’ இலவசத்திட்டம் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இரண்டு நாட்களாக நடைபெற்று வருகின்றது.

எதிர்வரும் 17ம் திகதி வரை தொடரவுள்ள இச்சேவையில் இன, மத வேறுபாடின்றி அனைவரும் பயனடையும் வகையில் மிகவும் உயர்ரக சேவை வழங்கப்படுகின்றது.

இம்மருத்துவமுகாமில் சுமார் 500 சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

அதி நவீன கருவிகளைக் கொண்டு மிகவும் பயிற்றப்பட்ட வைத்தியர்கள் மூலம் தொடர்ச்சியாக ஒவ்வொரு வருடமும் இச்சேவை வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத் தக்கது.

தொடர்புகளுக்கு
652 245 561

கலாநிதி அஷ்ஷெய்க் எம்.பி.எம்.இஸ்மாயீல் மதனி

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *