செனல் 4 வெளியிட்ட காணொளி தொடர்பில் உள்ளக விசாரணை திருப்தியளிக்கும் வகையில் அமையாது என பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்
எமது நாட்டில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் என்பது பல அப்பாவி உயிர்களை காவுகொண்ட கசப்பான சம்பவம். இதன் பின்னணியில் உள்ளவர்களுக்கும் சூத்திரதாரிகளுக்கும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க நாம் வலியுறுத்தி வந்துள்ளோம்.
தற்போது செனல் 4 காணொளியினூடாக பல விடயங்கள் சொல்லப்பட்டுள்ளன. அதனை முழுமையாக உண்மைதன்மையற்றது என மறுத்துவிட முடியாது. இது தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் ஒன்றுக்கொன்று முரண்பாடாகவே காணப்படுகின்றன. எனவே உள்ளக விசாரணை என்பது கண்துடைப்பாகவே அமையும். எனவே இது தொடர்பில் சர்வதேச விசாரணையே உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்கும் என அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.