எம்.ரீ.எம்.பாரிஸ்

ஓட்டமாவடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யில் முத்தான முப்பெரும் விழா கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

கல்லூரி அதிபர் அல் ஹாஜ் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக் (SLPS-01) தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் ஏ.அரவிந்த் குமார் கலந்து கொண்டார்.

கெளரவ அதிதியாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பணிப்பாளர் எஸ்.எம்.எம்.அமீர், லெப்டினண்ட் கேர்ணல் அனஸ் தாவூத், பேராசிரியர் கலாநிதி எம்.ஏ.சீ.நாஸர், சிறப்பதிதியாக கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி கோட்டக்கல்வி அதிகாரி வீ.ரீ.அஜ்மீர், முன்னாள் அதிபர்களான ஏ.எம்.ஏ.காதர், எம்.சீ.எச்.முஹம்மட் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

அத்துடன், அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச்சங்க, கல்வி அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், பாடசாலை மாணவர்கள் எனப்பலரும் இவவிழாவில் கலந்து கொண்டனர்.

முப்பெரும் அமர்வுகளாக இடம்பெற்ற இவ்விழாவில் மாணவத்தலைவர்களுக்கான சின்னஞ்சூட்டும் நிகழ்வு, கல்குடாத்தொகுதியின் முதலாவது கணக்கியல் பேராசிரியரும் பாடசாலையின் பழைய மாணவருமான கலாநிதி எம்.சீ.ஏ.நாஸர் கெளரவிப்பு மற்றும் 2021ம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த சாதரண தரப்பரீட்சையில் 5 ஏ சித்திகளுக்கு மேல் பெற்ற மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்கள் கெளரவிப்பும் என்பன இடம்பெற்றன.

அத்துடன், கல்வி இராஜாங்க அமைச்சர் ஏ.அரவிந்த் குமார் (எம்பி) அவர்கள் பாடசாலைச்சமூகம், பாடசாலை பழைய மாணவர் சங்கம், ஓட்டமாவடி வர்த்தக சங்கம் ஆகியவற்றால் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டமை விஷேட அம்சமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *