அஸ்ரப் அலீ
நாடாளுமன்ற உறுப்பினரும், நாடறிந்த நடிகருமான உத்திக பிரேமரத்னவை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது
அவர் அநுராதபுரத்தில் உள்ள தனது வீட்டுக்கு வருகை தந்த சந்தர்ப்பத்தில் இந்தத் துப்பாக்கிச் சூடு, மர்ம நபர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வாகனமொன்றில் வருகை தந்த மர்ம நபர்கள், உத்திக பிரேமரத்ன எம்.பி.யின் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
எனினும் அதிர்ஷ்டவசமாக அவர் காயங்களின்றி தப்பித்துக் கொண்டுள்ளார்.
பொதுஜன பெரமுணவின் நாடாளுமன்ற உறுப்பினரான உத்திக பிரேமரத்ன, அண்மையில் நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிவிட்டு சுயாதீனமாக இயங்கப் போவதாக அறிவித்திருந்தார்