அமெரிக்கா தனது எப்.35 பி என்ற அதி நவீன போர் விமானத்தை காணவில்லை என்று அறிவித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய விமானப் படை கொண்டுள்ள அமெரிக்காவின் 80 மில்லியன் டாலர் மதிப்புடைய இந்த விமானம் எங்கே போனது என்று அறிந்துகொள்ள முடியாமல் ராணுவம் திணறி வருவதாக தெரிவித்துள்ளது.
தென் கரோலினா கடலோரம் இந்த விமானம் சென்ற போது தொடர்பு அறுந்து மாயமாகி விட்டததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானம் ஆட்டோ மோடில் இருந்ததாகவும் விமானி பாராசூட் மூலம் குதித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.