ராமு தனராஜா

 

எல்ல பகுதிக்கு சுற்றுலா வந்த ஸ்லோவேனியா நாட்டைச் சேர்ந்த இரு பெண்கள்  விபத்தில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

பண்டாரவளை எல்ல பகுதிக்கு சுற்றுலா வந்த ஸ்லோவேனியா நாட்டைச் சேர்ந்த 23,23 வயதுடைய இரண்டு பெண்கள் எல்ல புகையிரத நிலையத்துக்கு அருகாமையில் நேற்று மாலை மோட்டார் சைக்கிளல் செல்கையில் கட்டுப்பாட்டை இழந்து  விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் காயமடைந்த இரண்டு பெண்களும் அயலவர்களின் உதவியுடன் மீட்கப்பட்டு 1990 காவு வண்டி மூலம் பதுளை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

 

ராமு தனராஜா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *