ஏ.ஆர்.எம்.றிபாஸ்
கிண்ணியா நிருபர்
இது தொர்பான ஊடக சந்திப்பு இன்று(22) கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தில் பணிப்பாளர் பீ. மதனவாசகம் தலைமையில் நடைபெற்றது இதன் போது சுற்றுலா பணியகத்தின் பொது முகாமையாளர் Dr.ஞானசேகரன் மற்றும் கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களப் பணிப்பாளர் என். எம். நெளபீஸ் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தனர்
கிழக்கு மாகாண சுற்றுலா பணியகம் ,கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களம் , கிழக்கு மாகாண சிறுவர் திணைக்களம் மற்றும் கிழக்கு மாகாண கலாசார திணைக்களம் இணைந்து மா பெரும் களியாட்ட நிகழ்ச்சிகளை நடாத்த ஏற்படு முன்னெடுத்து வருவதாக சுற்றுலா பணியகத்தின் பணிப்பாளர் பீ. மதனவாசகம் தெரிவித்தார்
மேலும் தெரிவிக்கையில்
திருகோணமலை மாவட்டத்தின் டச்வே கடற்கரையில் எதிவரும் 27 ஆம் திகதி மாலை 4.30 மணியளவில் கலாச்சார நிகழ்ச்சிகளுட்ன் ஆரம்பிக்கப்பட்டு தொடச்சியாக 5 நாட்கள் போட்டி நிகழ்ச்சிகள், களியாட்ட நிகழ்சிகள், ஒக்டோபர் முதலாம் திகதி சிறுவர் தின நிகழ்ச்சிகள் என நீச்சல், அரை மரதன் ஓட்டம் , பீச் வொலிபோல் ,பீச் கபடி மற்றும் இரவு நேரங்களில் பிரமாண்டமான இசை நிகழ்ச்சிகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்
இந் நிகழ்வில் அனைவரும் பங்குபற்றுவதற்கான சந்தர்பத்தை இலவசமாக வழங்குவதாகவும் தெரிவித்தார்