அமெரிக்காவில் பெண்ணொருவர் தனது வீட்டின் குளிர்சாதனப் பெட்டியில் இறந்த நாய்களின் உடல்களை வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரிசோனா மாகாணத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பெண்னின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அயலவர்கள் பொலிஸாருக்கு புகார் அளித்துள்ள நிலையில், அங்கு சென்ற பொலிஸார் வீட்டில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது அங்கிருந்த குளிர் சாதனப் பெட்டியில் 5 நாய்களின் சடலங்கள் இருந்துள்ளதோடு, மேலும் 55 நாய்கள் மோசமான நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதனையடுத்து நாய்களை மீட்ட பொலிஸார் அவற்றை விலங்குகள் நல காப்பகத்தில் சேர்த்ததுடன், வீட்டின் உரிமையாளரான மெக்லாலின் என்ற பெண்ணையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.