அமெரிக்காவில் நண்பர்களுக்கு இடையே நடந்த துப்பாக்கி சூட்டில் பஸ்ஸில் சென்று கொண்டு இருந்த கர்ப்பிணி பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணம் ஹோலியோக் பகுதியில் நண்பர்கள் கூடி அரட்டை அடித்து கொண்டு இருந்துள்ளனர்.

அப்போது அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதோடு, அதில் ஆத்திரமடைந்த ஒருவர் தான் வைத்து இருந்த துப்பாக்கியால் சுட ஆரம்பித்துள்ளார்.

அந்த நேரம் பார்த்து அப்பகுதி வழியாக சென்ற பேருந்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் இருந்துள்ளார், அவர் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து கர்ப்பிணி பெண் படுகாயம் அடைந்துள்ளார்.

இதையடுத்து சிகிச்சைக்காக கர்ப்பிணி பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு குழந்தை பிறந்துள்ளது.

ஆனால் அந்த குழந்தை துரதிஷ்டவசமாக சிறிது நேரத்தில் இறந்து விடுகிறது.

அமெரிக்காவில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்பட்ட இந்த நிலைமைக்கு காரணமான நண்பர்கள் 3 பேர் மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்துள்ளனர்.

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *