இஸ்ரேல் – ஹமாஸ் பயங்கரவாதிகள் குழுவினரிடையேயான போரை தொடர்ந்து இஸ்ரேலில் அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் நாட்களில் மூட இராணுவம் உத்தரவிட்டுள்ளது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் எவ்வித முன்னறிவிப்பு மின்றி கடந்த சனிக்கிழமை திடீரென தாக்குதல் நடத்தியது.
இதேவேளை, ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை அடுத்தடுத்து ஏவியது. இந்த ஏவுகணை தாக்குதலில் பெண்கள், முதியவர்கள் என நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு பதிலடி தரும் வகையில், 48 மணித்தியாலத்தில் 3 லட்சம் வீரர்களை இஸ்ரேல் குவித்துள்ளது. இதுவரை இல்லாத வகையில் விரைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையிலேயே இஸ்ரேலில் அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் நாட்களில் மூட இராணுவம் உத்தரவிட்டுள்ளது.