ஜேர்மனியில் நேற்று காலை இடம்பெற்ற வீதி விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியின் முனிச் நகரின் கிழக்கு பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப் பகுதியில் வேகமாக பயணித்த ஜீப் ரக வாகனத்தை காவல்துறை சோதனை சாவடியில் நிறுத்துமாறு காவல்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

எனினும் காவல்துறையினரின் இந்த அறிவுறுத்தலை மதிக்காது வேகமாக பயணித்த ஜீப் ரக வாகனம் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் அவ் ஜீப் ரக வாகனம் தீப்பற்றி எரிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜீப் ரக வாகனத்தில் பயணித்த 7 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *