கேகாலை, அவிசாவளை பிரதான வீதி, ருவன்வெல்ல, வந்தல பிரதேசத்தில், நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பயணித்த ஜீப் விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தின் போது, ​​அமைச்சர் உட்பட 5 பேர் வாகனத்தில் இருந்தனர்.

இந்த விபத்தில் சியம்பலாபிட்டியவின் பாதுகாப்பு உத்தியோகத்தர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, சிறு காயம் காரணமாக ராஜாங்க அமைச்சர் தற்போது கரவனெல்ல ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *