பிரேசிலின் குறைந்த கட்டண விமானம், புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் ஓடுபாதையில் அதன் இயந்திரம் தீப்பிடித்ததால், விமானம் பழுதடைந்தது.

கடந்த 4 ஆம் திகதி அன்று ரியோ டி ஜெனிரோவில் உள்ள சாண்டோஸ் டுமோன்ட் விமான நிலையத்தில் இருந்து போர்டோ அலெக்ரேவுக்கு விமானம் பயணத்திற்கு தயாராகிக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்தது.

அது புறப்படுவதற்கு சற்று முன், “தொழில்நுட்ப பிரச்சனை” காரணமாக என்ஜினில் இருந்து தீப்பிழம்புகள் வெடித்து, விமானம் நிறுத்தப்பட்டது என்று மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஒரு மணி நேரம் ஓடுபாதை மூடப்பட்டதால் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

தொழில்நுட்பக் கோளாறு சரியான நேரத்தில் கண்டறியப்பட்டதாகவும், அனைத்து அவசரகால நெறிமுறைகளையும் விமானிகள் மற்றும் பணியாளர்கள் பின்பற்றியதாகவும் விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் என்ஜின் இரண்டில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டதால், புறப்படுதல் தடைபட்டது” என்று ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *