தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் (TNA) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் நேற்று மாலை மற்றுமொரு சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

வடக்கு. கிழக்கில் நிலவும் காணி விடுவிப்பு, அதிகார பகிர்வு உள்ளிட்ட விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாகாண சபை தேர்தல் குறித்தும் மேற்படி கலந்துரையாடலில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை இந்த சந்;திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட சில பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவும் இதில் பங்கேற்றிருந்தார்.

வௌிவிவகார அமைச்சர் அலி சப்ரி, சட்டமா அதிபர், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் ஆகியோரும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

கடந்த மாதத்திலும் கூட்டமைப்பினருடன் ஜனாதிபதி கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *