பாகிஸ்தான் பள்ளி அருகே குண்டு வெடிப்பு – 52 பேர் மரணம்! 132 பேர் காயம்.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் (Balochistan) மாகாணத்தில் முஹம்மது நபியின் பிறந்தநாளைக் கொண்டாடும் ஊர்வலத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் மற்றும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. A bomb blast rocked #Pakistan on the occasion of Eid Milad-Un-Nabi. pic.twitter.com/a8Uty2I4H0 — Hindustan Times (@htTweets) September 29, 2023 பலுசிஸ்தானின் மஸ்துங் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளி அருகே வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்தது, குறைந்தது 132 […]

நெல்சன் மண்டேலாவின் பேத்தி மரணம்

தென் ஆப்பிரிக்கா நாட்டில் ஜனநாயக முறைப்படி முதல் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் நெல்சன் மண்டேலா. நிற வெறிக்கு எதிராக போராடிய தலைவர்களில் முக்கியமானவராக திகழ்ந்தார். இவரது பேத்தி ஜோலேகா மண்டேலா (வயது 43). இவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் அவருக்கு கல்லீரல், நுரையீரல், முதுகுதண்டு போன்ற உறுப்புகள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று மரணம் அடைந்து விட்டதாக நெல்சன் மண்டேலா […]

ஈராக் நாட்டில் திருமண நிகழ்ச்சியில் திடீரென தீ விபத்து 100 பேர் பலி

ஈராக் நாட்டின் வடக்கே நைன்வே மாகாணத்தில் ஹம்தனியா நகரில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அப்போது, திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இதில், நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் பலர் சிக்கி கொண்டனர். திருமண மண்டபத்தில் இருந்து வெளியேற முடியாமல் அவர்கள் திணறினர். மண்டபம் முழுவதும் கரும்புகை பரவியது. இதனால், பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் 100 பேர் வரை உயிரிழந்து உள்ளனர். 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர் என மாகாண சுகாதார […]

அமெரிக்காவில் இறந்த நாய்களின் உடல்களை வைத்திருந்த பெண்

அமெரிக்காவில் பெண்ணொருவர் தனது வீட்டின் குளிர்சாதனப் பெட்டியில் இறந்த நாய்களின் உடல்களை வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரிசோனா மாகாணத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பெண்னின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அயலவர்கள் பொலிஸாருக்கு புகார் அளித்துள்ள நிலையில், அங்கு சென்ற பொலிஸார் வீட்டில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன்போது அங்கிருந்த குளிர் சாதனப் பெட்டியில் 5 நாய்களின் சடலங்கள் இருந்துள்ளதோடு, மேலும் 55 நாய்கள் மோசமான நிலையில் இருப்பதைக் கண்டு […]

உக்ரைன் தாக்குதலில் ரஸ்யாவின் முக்கிய தளபதி உள்ளிட்ட 34 பேர் பலி

உக்ரைன் தாக்குதலில் ரஸ்யாவின் கருங்கடல் கடற்படை படையணியின் தளபதி உட்பட 34 பேர் கிரிமியாவின் கருங்கடலில் உள்ள ரஸ்யாவின் கடற்படை தளத்தின் மீது மேற்கொண்ட உக்ரைன் மேற்கொண்ட தாக்குதலில் ரஸ்யாவின் கருங்கடல் கடற்படை படையணியின் தளபதி உட்பட 34 பேர் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் செவஸ்டபோலில் இடம்பெற்ற தாக்குதலில் இந்த உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன. ரஸ்யாவின் கடற்படை தளபதிகளின் விசேட கூட்டத்தினை இலக்காக வைத்து இந்த தாக்குதல் இடம்பெற்றதாக உக்ரைனின் விசேட படைப்பிரிவின் அதிகாரிகள் […]

51 ஆயிரம் பேருக்கு பணி நியமன கடிதங்கள் – பிரதமர் மோடி

பிரதமர் மோடி, கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகளில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள், பணியிலிருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, மத்திய அரசு துறைகளின் மனித வளங்கள் குறித்து பிரதமருக்கு எடுத்துரைக்கப்பட்டது. இதனடிப்படையில், அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்குள் சிறப்பு பணி நியமனங்கள் மூலம் மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 10 லட்சம் இடங்களை நிரப்பிட பிரதமர் மோடி அப்போது அறிவுறுத்தினார். இதனை தொடர்ந்து, நாடு முழுவதும் 10 […]

கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்தில் 5.4 கிலோ தங்கம் பறிமுதல்

கேரள மாநிலம் கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் பயணிகள் சிலர் தங்கம் கடத்தி வருவதாக சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் சுங்கத்துறையின் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள், கடந்த 2 நாட்களாக அதிரடி சோதனை நடத்தி வந்தனர். இதில் வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வந்த 6 பயணிகள் சிக்கினர். அவர்கள் கேப்சூல் வடிவிலும், தாள் வடிவிலும் மறைத்து எடுத்து வந்த தங்கத்தை அதிகாரிகள் சோதனையின் போது கண்டுபிடித்தனர். அவர்களிடமிருந்து மொத்தம் […]

கட்டிடம் ஒன்றிலிருந்து விழுந்த மூன்று வயது சிறுவன் உயிரிழப்பு

ஒட்டோவாவில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்றிலிருந்து மூன்று வயது சிறுவன் விழுந்த உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொனால்ட் வீதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. சம்பவத்தில் காயம் அடைந்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சிறுவன் 18 ஆம் மாடியில் இருந்து கீழே விழுந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.      

அஜர்பைஜனில் திடீரென வெடி விபத்து

அஜர்பைஜனில் உள்ள ஸ்டெபனகெர்ட் பகுதி வெளியே எரிவாயு நிலையம் இயங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு நேற்று பிற்பகுதியில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டதோடு இந்த விபத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சம்பவ இடத்தில் இருந்து 13 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் ஏழு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தெரியவந்துள்ளது. 290 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பலர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் பிராந்தியத்தின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மூன்று தசாப்த […]

லிபியாவில் நகர மேயர் உட்பட மொத்த அதிகாரிகளும் அதிரடி கைது!

லிபியா நாட்டில் ஏற்பட்ட மிகபெரும் வெள்ளப்பெருக்கால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், தற்போது நகர மேயர் உட்பட மொத்த அதிகாரிகளையும் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் டெர்னா நகரை வெள்ளத்தில் மூழ்கடித்த அணைகள் இடிந்து விழுந்ததில் தவறான நிர்வாகம் மற்றும் அலட்சியம் குறித்த சந்தேகம் தொடர்பில் இந்த கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. லிபியாவின் அட்டர்னி ஜெனரல் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில், புயலுக்கு பின்னர் டெர்னா நகரில் அணைகள் இடிந்து விழுந்தது தொடர்பாக 8 உள்ளூர் அதிகாரிகளை கைது […]