வாகரை வீதியில் விபத்து : ஓட்டமாவடியைச்சேர்ந்த இரு இளைஞர்கள் காயம்!

தகவல் : நியாஸ் ஹாஜியார் அகீல் அவசர சேவைப்பிரிவு வாகரை வீதியில்  இடம்பெற்ற  வாகன விபத்தில் ஓட்டமாவடியைச்சேர்ந்த இரு இளைஞர்கள் காயம்டைந்துள்ளனர். நேற்று (29) மாலை 7 மணியளவில் திருமலை – வாகரை வீதியில் வாகரையிலிருந்து ஓட்டமாவடி நோக்கி வரும் வழியில் உசன ஏற்றத்தில் வைத்து மோட்டார் சைக்கிள் ஓட்டமாவடியைச்சேர்ந்த நபரொருவருக்குச் சொந்தமான சிறிய ரக லொறியொன்றுடன் மோதுண்டதில் இரு இளைஞர்கள் காயமடைந்து வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவ்விபத்தில் […]

வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றுங்கள் ! ஸ்ரீரங்காவின் மனுவை மேல் நீதிமன்றம் நிராகரிப்பு!!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்கா தனது சட்டத்தரணிகள் ஊடாக சமர்ப்பித்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ.மரிக்கார் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. வாகன விபத்து தொடர்பில் தாம் வவுனியா மேல் நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மனுதாரர் தெரிவித்துள்ளார். வழக்கை விசாரிக்கும் நீதிபதியின் பாரபட்சமான நடத்தை காரணமாக வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற உத்தரவு பிறப்பிக்குமாறு மனுதாரர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் கோரிக்கை […]

காத்தான்குடியிலிருந்து கொழும்பு வந்த பஸ் விபத்து ! சாரதி பலி, பலர் காயம்

அஸ்ரம் அலீ காத்தான்குடியில் இருந்து கொழும்பு நோக்கி வந்துகொண்டிருந்த பஸ் ஒன்றும், நிறுவனமொன்றின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற இன்னொரு வேனும் மோதி விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளனர் இச்சம்பவம் நிட்டம்புவை அருகே கஜூகம பிரதேசத்தில் இன்று மாலை நடைபெற்றுள்ளது. விபத்தில்  சாரதி உயிரிழந்துள்ளதுடன், இன்னும் பலர் காயமடைந்து மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

முஸ்லிம் விவாக, விவாகரத்துச்சட்டம் தொடர்பான இறுதி அறிக்கை கையளிப்பு

முஸ்லிம் விவாக, விவாகரத்துச்சட்டம் தொடர்பான இறுதி அறிக்கை நீதியமைச்சில் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச அவர்களிடம் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் முன்னாள் ஆளுனர் அசாத் சாலி உள்ளிட்ட சுமார் 27 இஸ்லாமிய அமைப்புக்களின் பிரதிநிதிகள், பெண் பிரதிநிதிகள், சட்டத்தரணிகள், சிவில் சமூக தலைவர்கள் மற்றும் உலமாக்கள் எனப்பலரும் கந்து கொண்டனர். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் 18 பாராளுமன்ற உறுப்பினர்களின் மும்மொழிவுகளை உறுதிப்படுத்தும் வகையிலேயே குறித்த ஆவணங்கள் அமைந்திருந்தன. இது பற்றி முன்னாள் ஆளுனர் அசாத் சாலி அவர்கள் […]

இனங்களுக்கிடையிலான சமாதான வழிகாட்டல் குழுவின் போதையொழிப்பு பேரணியும், வீதி நாடகமும் !

நூருல் ஹுதா உமர் இனங்களுக்கிடையில் நல்லுறவை கட்டியெழுப்பி இளம் சந்ததியை ஆற்றலும், நல்லொழுக்கமுமிக்க சந்ததியாக உருவாக்கும் நோக்கில் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி மற்றும் அதன்  அனுசரணை வலையமைப்பு  நிறுவனமான “இனங்களுக்கிடையிலான சமாதான வழிகாட்டல் குழு ஆகியவற்றின் ஏற்பாட்டில் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் நிகழ்ச்சி திட்ட உத்தியோகத்தர் யூ.எல்.ஹபீலாவின் ஒருங்கமைப்பில் அமைப்பின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் எப்.எம்.எஸ். அன்ஸார் மௌலானா  தலைமையில் போதையொழிப்பு பேரணியும், வீதி நாடகமும் இன்று கல்முனையில் இடம்பெற்றது. கல்முனை […]

பாசிகுடாவில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தி இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்பு வழங்கும் திட்டம் !

  அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளமாகத் திகழும் அதிகளவான நட்சத்திர விடுதிகளையும், அழகிய கடற்கரை அமைப்பினையும் கொண்ட கோறளைப்பற்று பாசிக்குடா பகுதியில் சுற்றுலாத்துறையினை மேலும் மேம்படுத்தி அதனூடாக மாவட்டத்திற்கான வருமான மட்டத்தினையும், இளைஞர் யுவதிகளுக்கான வேலை வாய்ப்புக்களையும் அதிகரிப்பது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான சிவ சந்திரகாந்தன் அவர்கள் தலைமையில் நட்சத்திர விடுதி உரிமையாளர்கள் மற்றும் ஏனைய சுற்றுலா விடுதி உரிமையாளர்கள், முகாமையாளர்களுடன் […]

எடுத்துச் செல்லப்பட்ட கலைப்பொக்கிஷங்களை மீள ஒப்படைக்கும் நெதர்லாந்து

இலங்கையில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட கலை பொக்கிஷங்களை மீள ஒப்படைப்பதாக நெதர்லாந்து அரசாங்கம் உறுதிமொழி  வழங்கியுள்ளது. இலங்கையின்  வெளிவிவகார அமைச்சர் சட்டத்தரணி ஜனாதிபதி சட்டத்தரணி அலிசாப்ரி அவர்கள் நெதர்லாந்து அரசாங்கத்தின் கலை மற்றும் ஊடக செயலாளர் உடன் இன்றைய தினம் சந்திப்பு ஒன்றை நடத்தி இருந்தார் இந்த இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்தும், மேலும் விஸ்தரிப்பது குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. டச்சு ஆட்சிக்காலத்தில் இலங்கையில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட ஆறு கலை பொக்கிஷங்களை மீளவும் இலங்கையிடம் […]

அரசியல் நாடகங்களை நிறுத்துங்கள்! மக்கள் அவல நிலையை பாருங்கள்! கத்தோலிக்க சம்மேளம் அறிக்கை

இலங்கையின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் தொடர்பில் முழு அரசியல் தலைமைகளும் ஆழ்ந்த அவதானம் செலுத்துமாறு கோரி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சட்டத்தின் ஆட்சி கடுமையாக சீர்குலைந்துள்ளதாகவும், நாடு முழுவதும் வன்முறைகள் அதிகரித்து வருவதாகவும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான ஒரு ஆபத்தான சூழ்நிலையில் அரசியல் நாடகங்களை புறக்கணித்து மக்களின் அவல நிலையை அதிகாரிகள் கவனத்தில் கொள்ளுமாறு கத்தோலிக்க சம்மேளனம் கேட்டுக் கொள்கிறது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்  ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான […]

இலங்கை விஜயம் செய்திருக்கும் அமெரிக்க செனட்டர்!பல தரப்பட்ட சந்திப்புக்களை நடத்தவுள்ளார்.

அமெரிக்காவின் MaryLand  செனட்டரான கிறீஸ் வேன் ஹோலன் உத்தியோகபூர்வ விஜனமொன்றை மௌற்கொண்டு இலங்கை விஜயம் செய்திருக்கிறார். ராஜதந்திரியான கிறீஸ் அவர்களின் தந்தை கிறீஸ் வேன் ஹோலன் சீனியர் 1972 – 1976 ஆம் ஆண்டு இலங்கையின் அமெரிக்க தூதுவராக கடமையாற்றியவர். தற்போதைய நிலையில் இவரது வரவானது முக்கிய அரசியல் விடயமாக நோக்கப்படுகிறது. சீன போர்க்கப்பல் இலங்கை வர இருக்கிற சமயத்தில இவர் இலங்கை வந்திருக்கிறார். இவருடன் தாம் பல இடங்களை சுற்றி பார்க்க இருப்பதுடன் இலங்கையின் பொருளாதார […]

நாளைய தினம் அபூர்வ வானியல் நிகழ்வு

நாளைய தினம் சுப்பர் புளூ மூன் எனும் அரிய நிகழ்வு இடம்பெறவுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. சுப்பர் மூன் தினத்தில், சந்திரனானது வழக்கமான பௌர்ணமி தினங்களில் தென்படுவதைவிட 14 சதவீதம் பெரிதாகவும், 30 சதவீதம் அதிக பிரகாசத்துடனும் தென்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய அபூர்வ வானியல் நிகழ்வை உலகம் முழுவதும் பார்க்க முடியும் என்பதால் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். நீல நிலவு என்று அழைக்கப்படுவதால் நிலா நீல நிறத்தில் தோன்றும் என்று அர்த்தமல்ல. ஆனால் சில நேரங்களில் வளிமண்டல […]