பாசிக்குடாவில் பாரிய தீ விபத்து : கட்டுப்படுத்துவதில் தீயணைப்பு படையினர்

  எஸ்.ஐ.எம்.நிப்ராஸ் பாசிக்குடா அனந்தயா சுற்றுலா விடுதிக்கு அருகாமையில் தற்போது பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்புப் பிரிவினர் தீயைக்கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதுடன், பாரியளவில் தீப்பரவல் காணப்படுவதால் தீயினைக் கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்  

அமெரிக்க தூதுவர் மன்னாருக்கு விஜயம். புனித ஸ்தலங்களை  தரிசித்ததுடன் மதத்தலைவர்களுடன் விசேட பேச்சு

( வாஸ் கூஞ்ஞ) இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மன்னாருக்கு வெள்ளி மற்றும் சனிக்கிழமை (25,26) ஆகிய இரு தினங்கள் விஜயத்தை மேற்கொண்டு மன்னார் மாவட்டத்தில் பழமை வாய்ந்ததும் உலகம் போற்றும் புனித ஸ்தலங்களாக விளங்கும் புதுமைமிக்க மருதமடு அன்னையின் ஆலயத்துக்கும்  , பாடல் தளமாக விளங்கும் திருக்கேதீஸ்வர ஆலயத்துக்கும் விஜயத்தை மேற்கொண்டு வழிபாடுகளில் பங்கேற்றுள்ளார். அத்துடன் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகையும் சந்தித்துள்ளார். மன்னார் ஆயருடன் நல்லதொரு கலந்துரையாடலில் தான் ஈடுபட்டதாகவும் , […]

கஜேந்திர குமார் MP இல்லத்தை இரண்டாவது தினமாக முற்றுகை!

  பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் இல்லம் ஆர்ப்பாட்டக்காரர்களினால் முற்றுகையிடப்பட்டுள்ளது. “வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் அரசியல்வாதிகள் தெற்கில் சுதந்திரமாக வாழ்வதை போன்று சிங்களவர்களும் வடக்கு மற்றும் கிழக்கில் சுதந்திரமாக வாழ வேண்டும்” என தெரிவித்து குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஆர்ப்பாட்டம் காரணமாக கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டுக்கு முன்பாக பெருமளவான பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இதேவேளை, […]

மீலாத் விழா மூலம் மன்னார்  மக்களின் ஒற்றுமை மேலும் பலம்பெற வேண்டும். ! காதர் மஸ்தான்

(வாஸ் கூஞ்ஞ) 26.08.2023 மன்னார் மாவட்டத்தில் சகல இனங்களுக்கிடையேயும் ஒற்றுமை நிலவி வருகின்றது. இது மேலும் பலம் பொருந்தியதாக அமைய வேண்டும் என்ற நோக்கிலேயே சகல இன மக்களும் இதில் கலந்து கொள்ளும் ஒரு வாய்ப்பாக மன்னாரில் முதன்முதலாக தேசிய மீலாத் நபி விழாவை நடாத்துகின்றோம் என கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் இவ்வாறு தெரிவித்தார். புத்தசாசன சமய விவகார மற்றும் கலாச்சார அலுவலர்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க […]

முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபாவின் மறைவுக்கு கடையடைத்து, வெள்ளைக்கொடி பறப்பு! துக்கம் அனுஷ்டிப்பு!

  பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது, மாளிகைக்காடு பகுதிகளில் நண்பகல் முதல் அங்குள்ள பொது நிறுவனங்கள், கடைகள் முற்றாக மூடப்பட்டு வெள்ளக்கொடி பறக்க விடப்பட்டு துக்கம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. அத்துடன், முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபாவின் மறைவு எமது பிராந்தியத்திற்கு பாரிய இழப்பாகுமென சாய்ந்தமருது, மாளிகைக்காடு வர்த்தக சங்கத்தலைவர் எம்.எம்.முபாரக் தெரிவித்துள்ளார். இன்று (26) அதிகாலை மரணமடைந்த அவர் மரணிக்கும் போது 71 வயதாகும். முன்னாள் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபா அவர்களின் ஜனாஸா தற்போது […]

சுட்டெரிக்கும் வெயிலின் தாகம் தணிக்க காத்தான்குடியில் தாகசாந்தி

  (அஸ்ஹர் இப்றாஹிம் ) கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் நிலவும் வரட்சியான காலநிலையால் பொதுமக்கள் சொல்லொணா துயரங்களை அனுபவித்து வருகின்றனர். சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்திலிருந்து பொது மக்களுக்கு நிவாரணம் தரும் வகையில் காத்தான்குடியைச்சேர்ந்த தனியார் நிறுவனமொன்று தன்னார்வாக முன்வந்து மனிதாபிமான அடிப்படையில் வழிப்போக்கர்கள், உள்ளூர், வெளியூர் வியாபாரிகள், பாடசாலை மாணவர்கள், வாடிக்கையாளர்களுக்கு தாகசாந்தி வழங்கியமை அனைவரினதம் கவனத்தை ஈர்த்துள்ளது. இத்தாகசாந்தி குளிர்பானத்தினை இன, மத, மொழி வேறுபாடின்றி அனைவரும் அருந்தி மகிழ்ந்தனர்.  

மன்னாரில் நடைபெற இருக்கும் 39 வது தேசிய மீலாத்துன் நபி தின விழா ஆலோசனைக் கூட்டம்.

( வாஸ் கூஞ்ஞ) மன்னாரில் நடைபெற இருக்கும் 39 வது தேசிய மீலாத்துன் நபி தின விழாவை முன்னிட்டு எவ்வாறு இவ்விழாவை நேர்த்தியான முறையில் நடத்துவது சம்பந்தமாக புத்தசாசன சமய விவரங்கள் மற்றும் கலாச்சார அலுவலர்கள் அமைச்சர் விதுர விக்ரம நாயக்க தலைமையில் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் அவர்களின் பங்கேற்போடு மன்னார் மாவட்ட செயலகத்தில் சனிக்கிழமை (26) காலை நடைபெற்றது. இந்நிகழ்வில் முஸ்லீம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்கள […]

மயோன் முஸ்தபா மறைவு

(ஏ.எல்.எம்.சலீம்) கிழக்கிலங்கையின் சிரேஷ்ட முஸ்லிம் அரசியல் வாதியும் முன்னாள் உயர் கல்வி பிரதி அமைச்சருமான மயோன் முஸ்தபா இன்று (26) கொழும்பில் காலமானார். கிழக்கிலங்கையின் கல்முனை – சாய்ந்தமருதைச் சேர்ந்த முன்னாள் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபா கொழும்பு கிருளப்பனையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானதுடன் அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் கொழும்பில் நடைபெறவும் ஏற்பாடாகியுள்ளது. அன்னாரின் மறைவு தொடர்பாக இலங்கையின் முக்கிய அரசியல் பிரமுகர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் அனுதாபச் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். திகாமடுல்ல மாவட்ட […]

முன்னாள் சீஐடி பணிப்பாளர் ஷானி அபேசேகர உட்பட 4 பேர் வழக்கிலிருந்து விடுதலை!

சிரேஷ்ட ஊடகவியலாளர் அஸீஸ் நிசாரூடீன்  குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர மற்றும் உப பொலிஸ் பரிசோதகர்களான சுகத் மெண்டிஸ் மற்றும் நிஷாந்த சில்வா ஆகியோர் கம்பஹா நீதவான் நீதிமன்றில் நேற்று இடம்பெற்ற வழக்கு விசாரணையில் போது விடுவிக்கப்பட்டனர். இந்த விடுதலைக்கு கொழும்பு குற்றப்பிரிவு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், ஷானி அபேசேகர மற்றும் ஏனைய சந்தேக நபர்கள் சார்பில் சட்டத்தரணி முன்வைத்த வாதங்களின் பிரகாரம் சந்தேகநபர்கள் நால்வரையும் குற்றமற்றவர்கள் என […]

“இலங்கையில் இரண்டாம் மொழி ஏற்படுத்திய இன நல்லிணக்கம்*

ரிப்பாஸ்  இன நல்லிணக்கமானது அண்மைக் காலமாக உலக நாடுகளிடையேயும் இலங்கை நாட்டிற்குள் வாழும் மக்களிடையே பேசப்பட்டு வரும் வர்த்தையாக இன நல்லிணக்கம் காணப்படுகின்றது குறிப்பாக இலங்கை போன்ற பல்லினம் வாழும் பல மொழி பேசும் நாட்டில் அதிகளவில் பேசப்பட்டு வருகின்றது அதற்கான காரணம் இனங்களுக்கிடையில் நீண்ட காலமாக சுமார் 30 வருடகாலமாக யுத்தத்தினால் முரண்பாடு காணப்பட்டது அந்த வகையில் யுத்த நிறைவடைந்த பின்னர் மக்களிடையே புரிந்துணர்வு சக வாழ்வு சமத்துவம் சமாதானம் போன்ற எண்ணக்கரு தோற்றம் பெறுவதையும் […]